SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதிகளை மீறிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.9.65 லட்சம் அபராதம்: அதிகாரி தகவல்

2022-08-24@ 00:01:01

சென்னை: விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூடுதல் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 19ம் தேதி நாடு முழுவதும்  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு ஊழியர்கள் உள்பட  பெரும்பாலானோருக்கு ஆக.19,20,21 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  இதையடுத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்