உடுமலை மையத்திற்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு-குப்பை இல்லாத நகரமாக உருவாக்க தர்மபுரி நகராட்சி நடவடிக்கை
2022-08-23@ 12:36:00

தர்மபுரி : தர்மபுரி நகரத்தை குப்பை இல்லாத நகரமாக உருவாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மறுசுழற்சிக்கு ஆகாத கழிவுகள் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடு, கடை, வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் தெருக்களில் தினசரி 22 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் குப்பைகள் 4 இடங்களில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. நகராட்சி சந்தைபேட்டை, பச்சியம்மன் மயானம், மதிகோன்பாளையம் பாதாளா சாக்கடை திட்ட நீரேற்றும் நிலையம் அருகே, குமாரசாமிபேட்டை அரிச்சந்திரன் கோயில் மயானம் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இக்குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில், மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்றாக சேகரித்து ஹைட்ராலிக் இயந்திரங்கள் மூலம் பண்டல் கட்டப்பட்டு உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மக்கும் குப்பைகளில் மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வைத்தால் ஒன்றும் பயன் அளிப்பதில்லை. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனால் உடுமலைப்பேட்டையில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு டீசலுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுத்த பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைப்பதன் மூலம் தர்மபுரி நகரத்தை சுகாதாரமாகவும், தூய்மையான நகரமாகவும் மாற்றப்படுகிறது. நேற்று 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்பட்டது. தர்மபுரி நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றிச்செல்லும் லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தினசரி வீடுகளிலிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் ஹைட்ராலிக் இயந்திரங்கள் மூலம் பண்டல் கட்டப்பட்டு உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு லாரி மூலம் அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் இதுவரை 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி நகராட்சியை குப்பை இல்லாத நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக மக்கும் மாற்று பொருட்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்று சூழல் பாதுகாக்கப்படும். கடைகளுக்கு மஞ்சள் பைகளை கொண்டு செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினர்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!