மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் உடற்கூறு ஆய்வு அறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்: 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
2022-08-23@ 00:04:25

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஜிப்மர் குழுவினர் விழுப்புரம் கோர்ட்டில் சீலிடப்பட்ட கவரில் நேற்று இரவு தாக்கல் செய்தனர்.ஸ்ரீமதியுடன் பள்ளியில் ஒன்றாக படித்த 2 மாணவிகள் நேற்று கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகிய 3 பேர் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. அதன்படி 2 உடற்கூறு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் நேற்று சீலிடப்பட்ட கவரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீதும் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஜிப்மர் குழு மருத்துவ ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் மாணவி ஸ்ரீமதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த நெருங்கிய தோழிகளான 2 மாணவிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போது, இறப்பதற்கு முன்பு ஸ்ரீமதி என்ன மனநிலையில் இருந்தார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்ததா?. யாராவது டார்ச்சர் செய்தார்களா?, விடுதியில் நடந்த சம்பவம் ஆகியவை குறித்து மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
In case of mysterious death of student Smt. autopsy report filed in Villupuram Court மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் உடற்கூறு ஆய்வு அறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!