பொதட்டூர் பேட்டை பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு: மன்ற கூட்டத்தில் ஒப்புதல்
2022-08-19@ 00:36:19

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்து மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.இரவிச்சந்திரன்( அதிமுக) தலைமையில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். இக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வரவு செல்வு கணக்கு விவரங்கள் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது. குறிப்பாக மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பேரூராட்சி முழுவதும் சுகாதாரம், தூய்மை பணிகள் மேற்கொள்வது, குப்பை கழிவுகள் அகற்றுதல் டெங்கு உள்ளிட்ட நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகள் தொடங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்து மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதிமுக, திமுக கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் குப்பன், வரித்தண்டலர் ஜெயசங்கர், கணினி இயக்குபவர் தணிகாச்சலம் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!