கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்: மக்கள் அச்சம்...
2022-08-18@ 11:52:15

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன. கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெய்வமலை செல்லும் சாலையில் சுமார் 70மீட்டர் தூரத்திற்கு திடீர் விரிசலும், 10 செ.மீ. ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடுக்கூடலூர் பகுதியில் 20கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இந்த இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்திய மண்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணனும் ஆய்வில் ஈடுப்பட்டார். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் நிலத்திற்கு அடியில் நீரோட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த விரிசல்கள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நீரோடைகள் மாற்று பாதைகளில் திருப்பவில்லை என்றால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், சேதம் அடைந்த வீடுகளை முழுவதுமாக இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டுவது தான் பாதுகாப்பு என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!