அமைச்சருக்கு கைது வாரன்ட் நிதிஷ் மழுப்பல்
2022-08-18@ 00:41:31

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், சட்ட அமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திகேய சிங் பொறுப்பேற்றார். கடந்த 2014ம் ஆண்டு கட்டிட உரிமையாளரை கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நாளன்று அவர் அமைச்சராக பதவியேற்று உள்ளார். எனவே, அவரை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி பாஜ எம்பி சுஷில் குமார் மோடி கோரி உள்ளார். ஆனால், கார்த்திகேய சிங் மீது உள்ள வழக்குகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நிதிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!