பாலக்காடு ரயில்வே மண்டல அலுவலகத்தில் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் நீராவி இன்ஜின் ரயில்
2022-08-17@ 18:45:05

பாலக்காடு: இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் விதமாக நீராவி இன்ஜின் பாலக்காடு ரயில்வே மண்டல அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாலக்காட்டில் கடந்த 1954ம் ஆண்டு ஸ்டீம் லோகோமோட்டீவ் வை.பி., 2204 மாடல் இன்ஜின் மற்றும் 9.65 டன் கல்கரியுடன் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஜெர்மன் நாட்டில் தயார் செய்யப்பட்ட இந்த இன்ஜின் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க கூடியது. இந்த நீராவி இன்ஜின் ரயில் சவுத் சென்டரல் ரயில்வே மண்டலத்தில் சேவைக்கு பயன்படுத்தப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி கோல்டன் ஒர்க்ஷாப்பிலிருந்து பாலக்காடு ரயில்வே அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில் இன்ஜின் மீண்டும் புதுமைப்படுத்தி பாலக்காட்டில் பொதுமக்கள் முன்னிலையில் இயக்கப்பட்டது. இதை பாலக்காடு மண்டல ரயில்வே மேலாளர் திருலோக் கோத்தாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நீராவி ரயிலை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மண்டல அலுவலகத்திற்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!