3.5 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில் சூப்பர் வாசுகியின் சோதனை வெற்றி: 27,00 டன் நிலக்கரியுடன் பயணம்
2022-08-17@ 00:03:51

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான ‘சூப்பர் வாசுகி’யில், 27,000 டன் நிலக்கரியுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தின் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் இடையே 295 வேகன்களில் 27,000 டன் நிலக்கரியை ஏற்றி கொண்டு 3.5 கிமீ நீளமுள்ள ‘சூப்பர் வாசுகி’ சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரயில் கோர்பாவில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு, 267 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்நந்த்காவை சென்றடைய மறுநாள் நண்பகல் 11.20 மணியானது. இந்திய ரயில்வேவால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான, கனமான சரக்கு ரயில் இதுவாகும். இந்த ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்களாகும். ‘சூப்பர் வாசுகி’ எடுத்துச் செல்லும் நிலக்கரியின் மூலம், ஒருநாள் முழுவதும் 3,000 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யலாம். 5 சரக்கு ரயில்களை ஒரே ரயிலாக இணைத்து இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags:
3.5 km long freight train Super Vasuki trial run 27 00 tonnes of coal journey 3.5 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில் சூப்பர் வாசுகி சோதனை வெற்றி 27 00 டன் நிலக்கரி பயணம்மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!