நிலக்கரி கடத்தல் வழக்கு 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்
2022-08-12@ 00:15:13

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி கடத்தல் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஞானவந்த் சிங், கோட்டேஸ்வர ராவ், செல்வமுருகன், ஷியாம் சிங், ராஜீவ் மிஸ்ரா, சுகேஷ் குமார் ஜெயின் மற்றும் ததாகதா பாசு ஆகியோர் உட்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் பிறகு இது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட 7 பேர் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் நிலக்கரி கடத்தல் வழக்கில் முக்கிய பங்கு வகித்தனர். ஆதாயம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன,’ என்று தெரிவித்தார்.
Tags:
Coal Smuggling Case 8 IPS Officer Enforcement Department Summons நிலக்கரி கடத்தல் வழக்கு 8 ஐபிஎஸ் அதிகாரி அமலாக்கத் துறை சம்மன்மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!