முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு பள்ளி முன்பு கிடக்கும் ராட்சத மரத்துண்டுகள்: அப்புறப்படுத்த கோரிக்கை
2022-08-11@ 14:41:43

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு நடுநிலைப்பள்ளி முகப்பு சுவர் அருகே கஜாபுயலில் விழுந்த மரங்களை ஏலம் எடுத்தவர் மரங்களை வெட்டிவிட்டு அடிப்பக்க துண்டுகளை போட்டுவிட்டு சென்றதை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி முகப்பு சுவர் அருகே கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது விழுந்த மரங்களின் அடிப்பகுதி துண்டுகள் அப்பகுதியில் இன்னும் அப்புறப்படுத்தாமல் இருக்கிறது.
புயலின்போது விழுந்த மரங்களை ஏலம் எடுத்தவர் துண்டுபோட்டு எடுத்து சென்ற நிலையில் இதனை மட்டும் ஏன் அப்படியே விட்டு சென்றார் என்று தெரியவில்லை. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி துவங்கும்போதும் விடும்போதும் இந்த மரத்துண்டுகள் மீது ஏற்றி நிற்பது, உட்கார்ந்து இருப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகினர். அதேபோன்று அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் இங்கு வந்து விளையாடி வருகின்றனர். நீண்டகாலமாக இங்கு மரத்துண்டுகள் கிடக்கும் பகுதி பராமரிப்பு இன்றி இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் ஊர்ந்து செல்கிறது. இதனால் இங்கு நடமாடுபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு எடையூர் அரசு நடுநிலைப் பள்ளி எதிரே கிடக்கும் மரத்துண்டுகளை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!