மொகரம் பண்டிகையை முன்னிட்டு கல்வராயன்மலை ெபரியார் நீர்வீழ்ச்சி, படகு குழாமுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
2022-08-10@ 21:23:30

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேகம், பெரியார், பண்ணியப்பாடி, கவ்வியம், செருக்கலாறு போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது. அதைப்போல வெள்ளிமலையில் படகு குழாமும், சிறுவர் பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலைக்கு கோடை மற்றும் விடுமுறை, பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் கார் போன்ற வாகனங்களில் சுற்றுலா செல்வது வழக்கம். தற்போது கல்வராயன்மலையில் நல்ல மழை பெய்ததன் மூலம் படகு துறையில் நல்ல நீர்பிடிப்பு உள்ளது. அதைப்போல நீர்வீழ்ச்சிகளிலும் நல்ல நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில் நேற்று மொகரம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கடலூர், புதுவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், பஸ் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். அதைப்போல ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு துறைக்கு வந்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். படகு சவாரி செய்யும்போது ரம்யமான சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து சென்றனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!