பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
2022-08-10@ 15:40:59

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட்டிற்கு ஒன்றிய அரசு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், அம்மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யாதை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து துணை நிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசையின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரிக்கு தேவையான நிதியை பெற்று தராமல், மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்து கொண்டிருக்கும் ஆளுநர் உடனடியாக பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள்
பொருளாதார தேக்க நிலை, வேலையிழப்புகள் குறித்த செயல்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது: டி.டி.வி.தினகரன்
பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!