வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்: ஜி.கே வாசன் கோரிக்கை
2022-08-10@ 14:52:29

சென்னை: வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை, அரசு காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றுப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளநீர் புகுந்து பலநூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, காய்கறிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. கொள்ளிடம் அருகேயும், ஆற்றுப்படுகை அருகில் உள்ள மேலவாடி கிராமத்திலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
அதிகமான பாதிப்பிற்குள்ளான பகுதிகள் நாதல்படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும். இப்பகுதியில் தோட்ட பயிர்களான, மரவள்ளிகிழங்கு, முல்லை, மல்லி, சாமந்திபூ சாகுபடி செய்யப்படுகிறது, அவை தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழுகிவிட்டது. மேலும் மாதர வேலூர் பகுதிகளில் செங்கல் காலவாய் தொழில் செய்து வருகின்றனர் இங்கு 50 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை தண்ணீர்சூழ்ந்து, சுடப்படாத செங்கல்கள் எல்லாம் நனைத்து கரைந்துபோய் அவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது.
ஆகவே தமிழக அரசு உடனடியாக வெள்ளநீர் வடிந்தவுடன் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும், செங்கல் உற்பத்தியாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடுகளை காலதாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!