ஆஜாதிகா அம்ருத் மகோற்சவம் முன்னிட்டு சித்தூரில் வீடு வீடாக சென்று 1000 பேருக்கு தேசியக்கொடி-மாத்ரு சேவா சங்க தலைவர் வழங்கினார்
2022-08-10@ 13:59:14

சித்தூர் : சித்தூரில் ஆஜாதிகா அம்ருத் மகோற்சவம் முன்னிட்டு சித்தூர் சந்தப்பேட்டை பகுதியில் மாத்ரு சேவா சங்க தலைவர் கந்தா நேற்று வீடு வீடாக சென்று 1000 பேருக்கு தேசிய கொடியை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் மேலே தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாத்ரு சேவா சங்கம் சார்பில் சித்தூர் சந்தப்பேட்டையில் உள்ள ஆயிரம் பேருக்கு இலவசமாக தேசிய கொடியை வழங்கி வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் மேலே இந்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுக்கு நம் இந்தியா ஒற்றுமையான நாடு என தெரியவரும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அனைத்து மதத்தினரும் இந்திய தேசத்தை நேசித்து வருகிறார்கள்.
உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா உலக நாடுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா தற்போது நன்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அவரவர்களின் வீட்டின் மேலே தேசிய கொடியை பறக்க விட்டு இந்திய தேசத்தை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் சங்க உறுப்பினர்கள் சண்முகம் கோகுல் யாதவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!