வெள்ளை மாளிகை கோப்புகள் மாயம்.! முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் எப்பிஐ சோதனை: அமெரிக்காவில் பரபரப்பு
2022-08-10@ 00:20:32

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பண்ணை வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், புளோரிடாவின் பால்ம் பீச்சில் உள்ள மார்-ஏ-லகோ எனும் டிரம்ப்பின் பண்ணை வீடு மற்றும் கிளப்பில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.
அந்த சமயத்தில் டிரம்ப் நியூயார்க்கில் இருந்துள்ளார். பதவி முடிந்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து செல்லும் போது, 15 பெட்டிகளில் ஆவணங்களை கொண்டு சென்றுள்ளார். பின்னர், தேசிய ஆவண காப்பகத்திடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கொடுத்துள்ளார். அதையும் தாண்டி இன்னும் சில முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து எப்பிஐ தற்போது சோதனை நடத்தி உள்ளது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, எப்பிஐ, நீதித்துறை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் செய்திகள்
ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு
இலங்கை நீதிமன்றம் உத்தரவால் சர்ச்சை: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை
தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கையில் சட்டப்பிரிவு 13ஏ முழுமையாக அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் தகவல்
அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்
கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!