பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு
2022-08-08@ 07:37:27

பாட்னா: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்தாலும் நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆனதில் இருந்தே அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் தொடர்கின்றன. அண்மை காலமாக உரசல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளை அவர் புறக்கணிப்பது இது 5வது முறையாகும்.
பாரதிய ஜனதாவிடம் நெருக்கம் காட்டிய ஆர்சிபி சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதை தவிர்த்துவிட்டதால் அவரது ஒன்றிய அமைச்சர் பதவி பறிபோகிவிட்டது. இதனால் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் தற்போதைய நிலையில் யாரும் இல்லை. ஒன்றிய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற போவதில்லை என்று அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்ற யூகங்கள் தேசிய அரசியலில் இறக்கை கட்டி பறக்கின்றன.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!