ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை பாயும்: தொழிலாளர்களுக்கு எம்டிசி எச்சரிக்கை
2022-08-03@ 00:03:51

சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்டிசி எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை : அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமானது 14வது, ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரி 22 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்றிட வேண்டி, வரு 3.8.2022 (இன்று) அன்றோ அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும். அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையானண விதிகளின்படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் செய்திகள்
சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்..!
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!