இலங்கை அதிபர் ரணில் பேச்சு கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரமல்ல
2022-08-02@ 00:13:11

கொழும்பு: ‘கோத்தபய வருகை அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர் நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல’ என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ஜூலை 13ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். சிங்கப்பூர் அரசின் விசா விரைவில் முடிய உள்ளதால் கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ‘‘கோத்தபய விரைவில் நாடு திரும்புவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல. கோத்தபய நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்,’’ என்றார். அதே நேரம், அரசு அலுவல் தொடர்பாக கோத்தபய உடன் ரணில் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
* இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்களுக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
* மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை இன்று வரை நீட்டித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழ் கட்சிகள் ஆதரவு
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இலங்கையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்த அரசை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்று ஆதரவு தெரிவித்தார்.
Tags:
Sri Lankan President Ranil Gotabaya to return to the country இலங்கை அதிபர் ரணில் கோத்தபய நாடு திரும்பமேலும் செய்திகள்
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்
இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!
சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதி : வாட்டிகன் அறிக்கை
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!