நன்னிலம் புதிய தாலுகா அலுவலகத்திற்காக இடிக்கப்படும் ஆங்கிலேயர்கள் ஆட்சிகால கட்டிடம்
2022-07-31@ 15:41:07

நன்னிலம்: நன்னிலத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சிகால கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பழமையான, தாலுகாவில் ஒன்றாகும். நன்னிலம் தாலுகா, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றது. தற்போது தாலுகா அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம், நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, அவர்கள் நிர்வாகம் நடத்திய இடமாகும். மிகவும் பழமையான கட்டிடம் என்பதனால், கட்டிடம் சிதலமடைந்து, மழை காலங்களில், அலுவலகங்கள் நடைபெற சிரமங்கள் ஏற்பட்டது.
நிலையில், கட்டிடத்தின் பழுது நிலைகளை கண்டறிந்து, தமிழக அரசு புதிய கட்டிடம் கட்ட, நிதி ஒதுக்கியது. இதை தொடர்ந்து தற்போது இயங்கி வந்த அலுவலகங்கள், மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. நன்னிலம் தாலுகா அலுவலகம், ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டு, திருவாரூர் முதன்மை சாலையில், அரசு கலைக்கல்லூரிக்கு அருகில், ஏற்கனவே நீதிமன்றம் இயங்கிவந்த கட்டிடத்திற்கு, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம், நல்லமாங்குடி இயங்கி வரும் மாணவர் விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக, பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!