தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது
2022-07-29@ 00:12:59

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,568, 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 25ம் தேதி ஒரு சவரன் ரூ.37,760, 26ம் தேதி ரூ.37,824 என்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,735க்கும், சவரன் ரூ.37,880 என்றும் விலை உயர்ந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4767க்கும், சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38136க்கும் விற்கப்பட்டது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 வரை அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு
கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை
82 நாடுகளில் 8,343 இந்தியர்கள் சிறையில் கைதிகளாக உள்ளனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை
குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பெரம்பலூர் அருமடல் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி
தனுஷ்கோடியில் ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!