ஊட்டி குருசடி காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு தகர கொட்டகைகள் அகற்றம்
2022-07-27@ 14:10:28

ஊட்டி : ஊட்டி குருசடி காலனி பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர கொட்டகைகள் அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் வருவாய்த்துறை, நகராட்சி, ெநடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக விளங்கும் மத்திய பஸ் நிலையம், ஊட்டி ஏ.டி.சி., உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவது மட்டுமின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல், குருசடி காலனி பகுதியில் நகராட்சி பார்க்கிங் தளம் அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறமுள்ள நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் காந்திராஜன் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகைகள் மற்றும் கொட்டகைகள் போன்றவற்றை அகற்றினர். மேலும், பார்க்கிங் பகுதியில் இருந்த தற்காலிக கடைகளையும் இடித்து அகற்றினர். குருசடி காலனி பகுதியில் இருந்த மொத்தம் 12 தற்காலிக கொட்டகைகளை அகற்றினர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,``குருசடி காலனி பகுதியில் நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர கொட்டகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டிஎட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம்.!
தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்: கரூர் அருகே நெகிழ்ச்சி
மண் பானைகளை உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்தது போலீஸ்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு.! இன்று உடல் பிரேத பரிசோதனை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!