நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி, ஜி.கே.வாசன் வாழ்த்து
2022-07-25@ 00:32:37

சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது.
2003ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும். இதேபோல், ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் மென்மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெறவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!