பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோக வெற்றி: பிரதமர் ஷெபாஸ் அதிர்ச்சி
2022-07-19@ 01:20:56

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது பஞ்சாப் மாகாணம். ஆளும் முஸ்லிம் லீக் நவாப் கட்சியின் கோட்டையான இங்கு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் 15 இடங்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்) நவாஸ் கட்சி 4 இடங்கள், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆளும் பிஎம்எல் நவாப் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளதால், தற்போது முதல்வராக இருக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் மகன் ஹம்சா ஷெரிப் பதவி இழக்க நேரிடும். இது பிஎம்எல் நவாப் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. விரைவில் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவால் பிரதமர் ஷெபாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில், இம்ரான் கான் தனது டிவிட்டர் பதிவு மூலமாக, விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளார்.
Tags:
Pakistan by-elections Imran's party victory Prime Minister Shebaz பாகிஸ்தான் இடைத்தேர்தல் இம்ரான் கட்சி வெற்றி பிரதமர் ஷெபாஸ்மேலும் செய்திகள்
ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு
இலங்கை நீதிமன்றம் உத்தரவால் சர்ச்சை: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை
தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கையில் சட்டப்பிரிவு 13ஏ முழுமையாக அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் தகவல்
அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்
கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!