போக்குவரத்து கழகத்துக்கு டிரைவர்களை அரசு நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
2022-07-19@ 01:10:46

சென்னை: போக்குவரத்து கழகத்துக்கு ஓட்டுநர்களை அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களில் நிர்வாகமே நேரடியாக தேர்வு செய்யாமல் தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திட டெண்டர் விடப்படுவது தனியார் மயமாக்குதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும். போக்குவரத்து பணியாளர்களை தேர்வு செய்ய டெண்டர் பணிகளை மேற்கொண்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. அதோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணிக்காக காத்திருக்கும் ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் தேர்வு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மயமாக்கும் போக்குவரத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் அரசே நேரடியாக பணிநியமனங்கள் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Transport Corporation Driver Govt Appointed GK Vasan போக்குவரத்து கழக டிரைவர் அரசு நியமிக்க ஜி.கே.வாசன்மேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்
பால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!