சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகைக்கு அன்னை தெரசா விருது
2022-07-13@ 17:02:50

மும்பை: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகை தியா மிர்சாவுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அன்னை தெரசா நினைவு விருதுகள் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி கடந்தாண்டிற்கான அன்னை தெரசா நினைவு விருதுகள் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் ‘ஐ.நா. சாம்பியன் ஆஃப் தி எர்த்’ விருது பெற்ற அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மேற்கண்ட இருவருக்கும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘சுற்றுச்சூழலுக்கான சேவையானது கடவுளுக்கு செய்யும் சேவையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றும் தியா மிர்சா, அஃப்ரோஸ் ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். மற்றவர்களும் இவர்களை போல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!