SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணியில் இருக்கும்போது உயிரிழந்த 6 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

2022-07-13@ 00:10:52

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 6 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று வழங்கினார். அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2021-22ம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின்படி 6 இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு நேற்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பணிநியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன், பழங்குடியினர் நலத் துறை இயக்குனர் எஸ்.அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் நேர்முக உதவியாளர் சு.பார்த்திபன் ஆகியோர்  உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்