திரவுபதி முர்முவை சந்தித்ததால் சமாஜ்வாதி கட்சியுடன் முறிவு?; ஓம் பிரகாஷ் ராஜ்பர் விளக்கம்
2022-07-10@ 15:45:24

லக்னோ: ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்ததால், சமாஜ்வாதி - சுபாஸ்பா கட்சியுடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (சுபாஸ்பா) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜக கூட்டணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில் அவரை காளிதாஸ் மார்க்கில் சந்தித்தேன். அந்த கூட்டத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.
முர்முவின் ஆதரவு கோரிக்கைக்கு மதிப்பளித்து நான் அவரைச் சந்தித்தேன். எங்களது கட்சியின் சார்பில் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து 4 நாட்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும். சமாஜ்வாதி கட்சியுடன் எங்களது கூட்டணி தொடர்கிறது. அக்கூட்டணியில் இருந்து விலகப்போவதில்லை. ஆனால், எங்களுடனான உறவை அகிலேஷ் (சமாஜ்வாதி தலைவர்) முறித்துக் கொண்டால், அதன்பின் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்’ என்றார். பாஜக கூட்டணியில் அல்லாத சில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது ஓம் பிரகாஷ் ராஜ்பரும் ஆதரவு அளிப்பதாக கூறி வருவதால், சமாஜ்வாதி உடனான கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!