சென்னைக்கு கடத்த முயன்றபோது மினி வேனுடன்; ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்
2022-07-07@ 15:50:04

வேலூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்காவை மினிவேனுடன் வேலூர் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலும் பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் அடிக்கடி குட்காவை பறிமுதல் செய்து வருகிறனர். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஊசூர் அடுத்த ரெண்டேரிகோடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரை நோக்கி சென்ற ஒரு மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பெங்களூரை சேர்ந்த அச்சுவர்த்தன் (22) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு 30 மூட்டைகளில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா போதை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவுடன் மினிவேனையும் அச்சுவர்த்தனையும் அரியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சுவர்த்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!