பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தியின் தோற்றம் வெளியீடு
2022-07-06@ 01:00:35

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி ஆகியோரின் கேரக்டருக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்துள்ளனர். இதில் விக்ரம் மற்றும் கார்த்தியின் கேரக்டர்களுக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து டீசரும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தஞ்சையில் இந்த படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Ponni's Selvan Vikram Karthi look release பொன்னியின் செல்வன் விக்ரம் கார்த்தி தோற்றம் வெளியீடுமேலும் செய்திகள்
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!