குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
2022-07-05@ 19:44:53

குன்னூர்: குன்னூர் பள்ளத்தாக்கில் 2 குட்டிகளுக்கு யானைக்கூட்டம் நடைபயிற்சி மற்றும் உணவு, குடிநீர் தேடும் வழித்தடத்தை காண்பித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டு குட்டிகளுடன் 10 யானைகள் குடிநீர், உணவு தேடி வந்துள்ளன. யானைக்கூட்டத்தின் தலைவன் யானைகளை வழிநடத்துகிறது. தாய் யானை குட்டிகளை அக்கறையுடன் பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறது.
குடிநீர், உணவு தேடி செல்லும் வழியை குட்டிகளுக்கு நன்கு கற்பிக்கின்றன. அதன்படி குட்டிகளும் பின்னே செல்கின்றன. இரண்டு குட்டிகளுடன் யானைக்கூட்டம் விளையாடிச்செல்வது காண்போரை பரவசப்படுத்துகிறது. யானைக்கூட்டம் அவ்வப்போது சாலையை கடக்கும்போது வாகனங்களால் அவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 10 யானைகளும் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே உள்ள கேஎன்ஆர் பகுதியில் சாலையை கடந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ரயில் தண்டவாளப்பகுதியில் முகாமிடுகின்றன.
தாய் யானை பள்ளத்தாக்கு இடுக்குகளில் சென்று குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. குட்டிகளும் தாய் யானைபோன்று பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து செல்கிறது. அப்போது அவைகள் வழுக்கி விழுந்து எழுகிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. மூத்த யானைகள் முன்னும், பின்னும் வழிநடத்துகிறது. குட்டிகள் யானை கூட்டத்தின் நடுவே பத்திரமாக செல்கின்றன. யானைக்கூட்டம் வரவால் இந்த பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!