2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
2022-07-05@ 14:46:02

போர்ட்பிளேயர்: அந்தமான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களில் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று காலையும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தமான் கடலில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை எவ்வித உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 215 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. அந்தமான் தீவைச் சுற்றியுள்ள பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. அதன்பின் அடுத்தடுத்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக இருந்தன. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் செய்துள்ளது.
மேலும் செய்திகள்
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!