ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணிக்கு விஏஓ சான்று அவசியம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
2022-07-04@ 00:06:57

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் திருப்பணி செய்வதற்கான கோயில்களின் பட்டியலை அனுப்பி வைக்க ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள கோயில் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை கொண்டு திருப்பணி செய்ய கடினமாக இருப்பதால் நிதியை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, தற்போது ரூ. 1 லட்சத்துக்கு பதிலாக ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கோயில்களை கண்டறிந்து திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அறிக்கை அனுப்பவும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2022-23ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு திருப்பணி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயிலை நேரில் பார்வையிட்டு ஒவ்வொரு ஆய்வர் பிரிவில் தகுதியான 4 கோயில் பட்டியலை அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டுகளில் அறிவிப்பில் இடம்பெறாத கோயில்களாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் அனுப்ப வேண்டும். அதில், கோயில் பெயர், ஊர், வட்டம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம், பணி நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள், உத்தேச மதிப்பீடு தொகை, நிர்வாகி பெயர், யாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags:
Adi Dravidar Tribal Living Area Temple Repair VAO Certificate Commissioner Kumaraguruparan ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதி கோயில் திருப்பணி விஏஓ சான்று ஆணையர் குமரகுருபரன்மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு கமலாலயத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி