கணவர் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: நடிகை மீனா வேண்டுகோள்
2022-07-03@ 00:57:37

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பினால் தான் இறந்தார் என்ற செய்தி ஊடகங்களில் பரவியது. இந்த நிலையில் மீனா, கணவரின் இறப்புக்கு பின்னர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ’எனது அன்பு கணவர் வித்யாசாகர் இறப்பால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவலை தயவு செய்து வெளியிட வேண்டாம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி. கடைசிவரை எனது கணவரை காப்பாற்ற முயன்ற மருத்துவ குழுவிற்கும், முதல் அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும் என்னுடைய குடும்ப நண்பர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!