உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவத்தில் ‘2611’ எண் பைக்கை கொலையாளிகள் பயன்படுத்தியது ஏன்?: ஆர்டிஓ வெளியிட்ட திடுக் தகவல்
2022-07-02@ 17:03:08

உதய்பூர்: உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவத்தில் ‘2611’ எண் கொண்ட பைக்கை கொலையாளிகள் பயன்படுத்தியது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் முகமது ரியாஸ் அத்தாரி, கோஷ் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கன்னையா லால் கொலை வழக்கில் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கொலையாளிகளின் மனநிலையை காட்டும் விதமாக உள்ளது. கன்னையா லால் கொல்லப்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே, குற்றவாளி முகமது ரியாஸ் அத்தாரி, தனது பைக்கிற்கு ‘2611’ என்ற நம்பர் பிளேட்டைப் பெற 1,000 ரூபாய் கொடுத்ததாக கொலையாளிகளுக்கு அறிமுகமான ஒருவர் தெரிவித்தார்.
‘2611’ என்ற பதிவு எண் ஆனது கடந்த 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் தேதியைக் குறிப்பிடுகிறது. குற்றவாளியின் பைக்கில் அதே நம்பர் பிளேட் உள்ளது. இதுகுறித்து உதய்பூர் வட்டார போக்குவரத்து ஆணையம் பிரபு லால் பமானியா கூறுகையில், ‘2611 என்ற விருப்ப பதிவு எண்ணுக்கான ரூ. 1,000 கட்டணம் வாகன உரிமையாளரிடம் பெறப்பட்டது. இந்த பைக்கின் பதிவு கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி செய்யப்பட்டது’ என்றார். கன்னையா லாலை கொன்ற முகமது ரியாஸ் அத்தாரி, கோஷ் முகமது ஆகிய இருவரும், ‘ஆர்ஜே 27 ஏஎஸ் 2611’ என்ற பதிவு எண் கொண்ட பைக்கில் இருந்து தப்பி சென்றதாகவும், அவர்கள் இருவரும் ராஜ்சமந்தில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு: சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒருவர் கைது
தகாத உறவை அம்பலப்படுத்திய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-பெரம்பலூர் அருகே பயங்கரம்
நள்ளிரவில் கண்முன்னே காதலனுடன் தனிமை கணவனை சரமாரி வெட்டி விட்டு போலீசில் சரணடைந்த மனைவி
குடிபோதையில் தகராறு 7 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த 3 வாலிபர்கள் கைது
சவாரி அழைப்பது போல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் நகை பறிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!