மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி
2022-07-01@ 16:01:50

மும்பை: மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். பத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த நாள் முதல் பாரதிய ஜனதா தொல்லை கொடுத்து வந்தது. அதேபோல நாங்கள் தற்போது அமைந்துள்ள ஷிண்டே தலைமையிலான புதிய அரசுக்கு ஒருநாளும் தொல்லை கொடுக்க மாட்டோம் என்றார்.
புதிய அரசு மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் செயலால் சிவசேனா பலவீனமாகவில்லை என்றும் அவர் கூறினார். மராட்டியத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற மறுநாளே மகா விகாஸ் கூட்டணியை அமைத்ததில் முக்கிய தலைவரான சரத் பவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2004 முதல் 2020 வரையிலான தேர்தல்களில் சரத் பவார் தாக்கல் செய்த சொத்து விவரங்களை கணக்கில் கொண்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!