நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்..!
2022-06-30@ 14:58:45

மதுரை: பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (26), நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு, கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு, ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை பாண்டியராஜன் அளித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘காசியின் லேப்டாப் மற்றும் செல்போனில் 120 பெண்களின் 1,900 அரை மற்றும் முழு நிர்வாண படங்கள் உள்ளன. மேலும் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் உள்ளன. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த படங்கள், வீடியோக்கள் ரெகவர் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்கள் மற்றும் வீடியோக்களை காசியின் தந்தை தங்கபாண்டி யன் அழித்துள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் உள்ளன. எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் 2வது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் இதே வழக்கில் மற்றொரு குற்றச்சாட்டில் அவருக்கு ஜாமீன் அளித்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கடல் கடந்தும் தமிழர்கள் போர்வெல் போடுகிறார்கள்... இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்செங்கோடு ரிக் இயந்திர வண்டிகள்
ஓசூர் அருகே மாந்தோப்பில் 5 யானைகள் முகாம்; பொதுமக்கள் பீதி
திருவையாறு அருகே பாலம் கட்ட குழிதோண்டியபோது 3 சாமி சிலை கண்டெடுப்பு
மேலூர் அருகே நெடுஞ்சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: புகையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
வாகன ஓட்டிகளை குறிவைத்து சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை: வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம்
ஏப்ரல் 4 ல் பங்குனி உத்திர தெப்போற்சவம்; குளித்தலை அய்யர்மலை கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: தெப்போற்சவ மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!