இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
2022-06-30@ 03:10:37

லண்டன்: ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாட இருந்த கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். நேற்று நடந்த 2வது பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, ‘5வது டெஸ்டில் ரோகித் விளையாட மாட்டார், அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும்’ என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை பும்ராவுக்கு கிடைத்துள்ளது. 1987ல் கபில் தேவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகும் 36வது வீரர் ஆவார்.
மேலும் செய்திகள்
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!