மாஸ்க் போடலன்னா சரக்கு கிடையாது: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
2022-06-29@ 00:02:04

சென்னை: மாஸ்க் அணியாமல் வரும் நபருக்கு மதுபானத்தை விற்க மாட்டோம் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம், ‘மாஸ்க்’ அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும், மதுவாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது, இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் ஊழியர்களும் முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்களும், ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்க பாஜக தயார்.! அதிமுக பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும்: அண்ணாமலை பேட்டி
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023”: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.!
விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் சார்பில் ரூ.5 கோடி பங்களிப்பு நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து படிவம் வெளியிட்டார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
போதிய ஆதரவு இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற உள்ளதாக தகவல்.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!