இதுவரை இல்லாத அளவுக்கு சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு: மோசமான வானிலை காரணம்
2022-06-29@ 00:01:33

டேராடூன்: இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 மாத யாத்திரையில் 2.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் அதிகப்படியாக உயிரிழந்துள்ளனர். கடந்த 26ம் தேதி கணக்கெடுப்பின்படி, 203 பேர் யாத்திரையின் போது இறந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 97 பேரும், பத்ரிநாத்தில் 51 பேரும், யமுனோத்திரியில் 42 பேரும், கங்கோத்ரியில் 13 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2019ல் 90 பேரும், 2018ல் 102 பேரும், 2017ல் 112 பேரும் யாத்திரையின் போது இறந்துள்ளனர். மிக மோசமான வானிலையே உயிரிழப்புக்கு காரணம் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
Tags:
Sardam pilgrimage 203 devotees casualties bad weather சார்தாம் யாத்திரை 203 பக்தர்கள் உயிரிழப்பு மோசமான வானிலைமேலும் செய்திகள்
தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு
அனல் பறக்கும் அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல்
பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு
ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ் தேர்வு விலக்கு கோரிய மனு பிப்.6ல் விசாரணை
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!