அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் ஏராளமானோர் பங்கேற்பு
2022-06-28@ 00:57:00

சென்னை: ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொது செயலாளர் வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை தலைவர் தாமோதரன், மலர்கொடி, அடையாறு ரவி, தலைமை நிலைய செயலாளர் திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் நலனை பாதிக்கும் அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Tags:
Agni Path Project Against Tamil Nadu Congress Demonstration Chennai அக்னி பாதை திட்டம் எதிராக தமிழகம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் சென்னைமேலும் செய்திகள்
பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்க பாஜக தயார்.! அதிமுக பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும்: அண்ணாமலை பேட்டி
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023”: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.!
விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் சார்பில் ரூ.5 கோடி பங்களிப்பு நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து படிவம் வெளியிட்டார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
போதிய ஆதரவு இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற உள்ளதாக தகவல்.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!