பாக். முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து?: இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி கைது..!!
2022-06-27@ 14:17:04

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இம்ரான்கான் வீட்டில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் இம்ரான்கான் அறையில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தியபோது பிடிபட்டார். அவரை தனி இடத்தில் அடைத்துவைத்த இம்ரான்கான் உதவியாளர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், வீட்டில் பணியாற்றும் நபர்களின் விவரங்களை கொடுக்குமாறு இம்ரான்கானிடம் பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை என்றார். பணியாளர்கள் விவரம் கிடைத்தால் மட்டுமே விசாரணை நடத்த உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். இதனிடையே இம்ரான்கான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவரது கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!