அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்; மாஜி அமைச்சர் உதயகுமார் தாக்கு
2022-06-26@ 20:01:58

மதுரை: அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ் என மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும். ஒற்றைத்தலைமைக்கு எடப்பாடி இருந்தால்தான் கட்சியை நடத்தி செல்ல முடியும். இபிஎஸ் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
ஜெ.மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை சேர்க்கக்கூடாது. ஜெ.இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை இபிஎஸ் நிறைவேற்றினார். டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் ரகசிய உறவாடி வருகிறார். தொண்டர்களை ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்றும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. காவல்துறைக்கு சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது.
ஓபிஎஸ்க்கு மன உறுதி என்பதே இல்லை. மன உறுதியோடு இருக்கும் இபிஎஸ் தான் தலைமைக்கு சரியான நபர். தொண்டர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பார். தலைமை என்றால் உறுதியோடு அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். அது இபிஎஸ் தான். அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழா: பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைப்பு
மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!