கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்: தண்டனை நிறுத்திவைப்பு
2022-06-24@ 00:06:37

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் கான்வென்டில் தங்கியிருந்த அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, சிபிஐ நடத்திய விசாரணையில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.இது தொடர்பாக பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
தாமசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ₹7 லட்சம் அபராதமும், செபிக்கு ஆயுள் தண்டனையும் ₹5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதிமன்றம், 2 பேருக்கும் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 2 பேரின் தண்டனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!