SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்: எஸ்.பி.வேலுமணி பேச்சு

2022-06-24@ 00:06:32

சென்னை: அதிமுக தொண்டர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றைத் தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக கொறடா வேலுமணி நன்றி உரையாற்றி பேசியதாவது: அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தொண்டர்களின் எழுச்சி போல, ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட தொண்டர்களின் எழுச்சி போல இப்போது தமிழகம் முழுவதும் தொண்டர்களின் மத்தியிலே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

கடந்த 9 நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வழி நடத்தி வருபவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு, மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை கட்டி காத்தவர். 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி மக்கள் விரும்பும் முதல்வராக இருந்தவர்.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிற அனைத்து நிர்வாகிகளுக்கும், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை, எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒற்றைத் தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்