நயன்தாராவுடன் நடிக்கிறார் தீபிகா படுகோன்
2022-06-24@ 00:04:10

மும்பை: இந்தி படத்தில் நயன்தாராவுடன் தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் நயன்தாரா. இதே படத்தில் ராணா, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, சுனில் குரோவர் உள்பட பலர் நடிக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, வைரலானது. இந்த படத்தை இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரைக்கு கொண்டு வருகின்றனர்.
படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடிக்க தீபிகா படுகோன் இருந்தால் நன்றாக இருக்கும் என அட்லீ விரும்பினார். ஷாருக்கானுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. இதையடுத்து ஷாருக்கானும் அட்லீயும் தீபிகாவை மும்பையில் நேரில் சந்தித்து பேசினர். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம்தான் இந்தியில் தீபிகா அறிமுகம் ஆனார். இப்போது பதான் படத்திலும் அவர் ஷாருக்கானுடன் நடித்திருக்கிறார். அந்த வகையில் இந்த படத்திலும் நடிக்க தீபிகா சம்மதித்துள்ளார். காட்சிப்படி நயன்தாரா, தீபிகா இணைந்து நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!