குளித்தலை அரசு மருத்துவமனையில் கிடா வெட்டி பிரியாணி விருந்து: சமூக வலைதளங்களில் வைரல்
2022-06-21@ 20:55:07

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் சேர்ந்து கிடாவெட்டி மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டிடத்தில் சமையல் செய்து பிரியாணி விருந்து சாப்பிட்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதனிடம் கேட்டபோது, குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். அடிக்கடி மனதளவில் பாதிக்கப்பட்டு வருவதால் ஒருநாள் இதுபோன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இந்த விருந்து நடத்தப்பட்டது. இந்த புகைப்படங்களை சர்ச்சையை கிளப்புவதற்காக சிலர் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சூறைக்காற்றுடன் பலத்த மழை தார்கள் வெட்டும் பருவத்தில் வாழை நாசம்-விவசாயிகள் கவலை
கோழிப்பண்ணைகளில் திடீர் ஆய்வு வடமாநில தொழிலாளர்களுடன் டிஐஜி கலந்துரையாடல்
கம்பம் உழவர் சந்தையில் வரத்துக்குறைவால் எலுமிச்சை விலை ‘எகிறுது’
தேனி ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்வுதளமான வாகன ஓடுதளம் ஒழுங்குப்படுத்தப்படுமா?
கொக்கிரகுளம், வண்ணார்பேட்டையில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுமா?
போக்குவரத்தை சீரமைக்க சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவக்கம்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!