பெர்லின் ஓபன் டென்னிஸ்: பைனலில் பெலிண்டா
2022-06-19@ 01:16:52

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் தகுதி பெற்றார். அரையிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (26 வயது, 6வது ரேங்க்) நேற்று மோதிய பெலிண்டா (25 வயது, 17வது ரேங்க்), டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டில் 6-7 (5-7) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் சாக்கரியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-7 (5-7), 6-4, 6-4 என்றகணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த அரையிறுதி ஆட்டம் 3 மணி, 7 நிமிடங்களுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பதக்கம் உறுதி
தங்கம் சுட்டார் சரப்ஜித்
சில்லி பாயின்ட்...
ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை
21 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!