கோத்தகிரி அருகே டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை: மதுவை பதுக்கி விற்ற 6 ஊழியர் கைது
2022-06-12@ 05:38:56

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாலை நேரம் மற்றும் இரவு முழுவதும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கட்டபெட்டு மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கட்டபெட்டுவில் 104 மதுபாட்டில்கள், ரூ.12,000 ரொக்கம் மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் 25 மதுபாட்டில்கள் ரூ.17,000 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். பார் ஊழியர்கள் 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். கோத்தகிரி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!