பேட்டிங்-பவுலிங் இரண்டிலும் ஜொலிப்பார்; டி 20 தொடரில் அஸ்வினை சேருங்கப்பா... முகமது கைப் சொல்கிறார்
2022-06-11@ 15:45:57

புதுடெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதற்கு கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாளவில்லை என்றும் குறிப்பாக ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் மாஜி வீரர் முகமது கைப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் பலமிக்கவைதான். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சில் ஒரு தவறு இருக்கிறது. சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று பேரும் லெக் ஸ்பின்னர்களாக இருப்பதுதான் தவறு.
மூன்று லெக் ஸ்பின்னர்களை வைத்து, எங்கேயும் சிறப்பாக விளையாட முடியாது. அணியில் லெக், ஆஃப் ஸ்பின்னர்கள் இருந்தால்தான், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். அஸ்வின் அணியில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. 2021 உலகக் கோப்பையில் இடம் பிடித்த அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். 3 லெக் ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை சேர்த்தால் மிகுந்த பலன் அளிக்கும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அஸ்வினால் ஜொலிக்கமுடியும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி: 100
மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா
சில்லி பாயிண்ட்ஸ்
பும்ராவுக்கு மாற்று வீரரை விரைவில் முடிவு செய்வோம்...: எம்ஐ கேப்டன் ரோகித் நம்பிக்கை
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்: வாசிம் கான் தகவல்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!