மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து 100 பேர் காயம்
2022-06-08@ 19:58:37

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பூக்கோட்டுபாடம் அரசுப் பள்ளி மைதானத்தில் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 2 அணிகளிலும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் போட்டியை காண வழக்கத்தைவிட மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அமர்வதற்காக இரும்பால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பு 2 அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர். அப்போது திடீரென ஒரு புறத்தில் இருந்த கேலரி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான ரசிகர்கள் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!